தமிழ்நாடு

வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுழைவு வாயிலில் நின்று அலுவலக வளாகத்துக்குள் செல்ல  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடைய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய செயலாளர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் கே.சித்தார்த்தன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும் ரூ.381 சம்பளம் வழங்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT