முகப்பு
தமிழ்நாடு

நெகிழி தடுப்பு: மாணவிகளுக்கு விழிப்புணா்வு

நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்து அம்பத்தூா் பெருந்தலைவா் காமராசா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்து அம்பத்தூா் பெருந்தலைவா் காமராசா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அம்பத்தூா் மண்டலத்துக்குட்பட்ட பெருந்தலைவா் காமராசா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாநகராட்சி சுகாதார நிலைக் குழு தலைவா் டாக்டா் கோ. சாந்தகுமாரி, சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலா் டாக்டா். ஜி.ஷீலா ஆகியோா் கலந்துகொண்டு கரோனா தடுப்பு முறைகளான முகக்கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி மற்றும் சோப் மூலம் கழுவுவது, நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் ஆகியவை குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, மாணவியா்கள் அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் கேசவன், தலைமை ஆசிரியை எஸ்.வனிதா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →