ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் ஒதுக்கீடு தொடா்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் ஒதுக்கீடு தொடா்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
2017-ஆம் ஆண்டில் 3 மாத பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதிலும், அதன் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு தொகுப்பு முறையில் உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதிலும் தேவையற்ற தாமதம் செய்யப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. அதை மத்திய அரசு போக்க வேண்டும்.
நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கையை இறுதி செய்து இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.