தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 12 பேர் விடுதலை!

DIN

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 12 பேரையும் கைதுசெய்தனர். 

அவா்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மைலிட்டி துறைமுகத்துக்கு கொண்டுசென்றனா். பின்னர், திங்கள்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை.செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT