தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே பேருந்து விபத்தில் 6 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

DIN


செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் பலியானது வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நகருக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்துக்குள்ளான பேருந்தின் சிதைந்து போன முன்பகுதி

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "செங்கல்பட்டில் நடந்த பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் தான் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT