FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 85% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 10 ஜூலை 2022, 1:06 pm IST
தடுப்பூசி முகாம்
பகிர்:


தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் இன்று 1,00,000 மையங்களில் 31வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் கரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தொடர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால், தமிழகத்தில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments