தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை: பணிகள் தீவிரம்

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

DIN


சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்குவது மெரினா கடற்கரை. இங்கு  கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் உள்ளன. மெரினாவின் இயற்கை கண்டு ரசிக்க நாள்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேலம் மரங்களைக் கொண்டு 250 நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்த பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT