முகப்பு
தமிழ்நாடு

நடராஜர் கோயிலில் தங்கமுலாம் பூசப்பட்ட நடராஜர் ஓவியம் பொருத்தம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூலை, 2022 at 11:07 AM
தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:20 PM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஓவியம் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சி.ஏ.நடராஜன், நடராஜர் கோயிலுக்கு, கும்பகோணம்  சிற்பிகளால் செப்புத் தகட்டில்    மிகப்பிரமாண்டமான  சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு தங்க முலாம்  பூசபட்ட அழகிய ஓவியத்தை அர்ப்பணித்தார்.

நடராஜர் கோயில் கொடிமரத்து நுழைவு வாயிலில்பொருத்தப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஓவியம்

இந்த அழகிய ஓவியம் நடராஜர் கோயிலின் கொடிமரத்து நுழைவுவாயிலில்  பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.