சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு
சென்னை அருகே வானகரத்தில் சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி இறந்தாா்.
சென்னை அருகே வானகரத்தில் சரக்கு பெட்டக லாரி மோதி கூலித் தொழிலாளி இறந்தாா்.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன் (26). கூலித் தொழிலாளியான இவா், வானகரத்தில் தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு பெட்டக லாரி, வெற்றிச் செல்வன் மீது மோதியது.
இதில் பலத்தக் காயமடைந்த வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த அந்த லாரி ஓட்டுநா், அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெற்றிச்செல்வன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.