கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று ஆந்திரத்தைச் சேர்ந்த ரமணா(28) என்கிற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து உடனடியாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திலிருந்த ரமணா யோகா செய்வதற்காக ஈஷா மையத்திற்கு வந்ததாகவும் பின் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.