தமிழ்நாடு

பி.இ, பி.டெக் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.3 வரை நீட்டிப்பு

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பொறியியல் மாணவா் சோ்க்கை குழுவால் ஜூன் 20-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2,442 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவா்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபாா்த்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த விளையாட்டு வீரா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக உயா் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் 2022-2023- ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளார். 

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சேர்க்கைக்கான அவகாசம் முடியவிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT