முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் இந்தியாவுக்கே பெருமை: அமைச்சர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
அமைச்சர் மெய்யநாதன் (கோப்புப் படம்)
பகிர்:


செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

கிராமங்களின் எல்லா இடங்களிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் சென்று சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டத் தொடர் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் போட்டிகளில் நடு முழுவதிலுமிருந்து 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இதனை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கிராமங்களில் மூலை முடுக்கு வரைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் சென்று சேர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைவரும் செஸ் விளையாட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →