பேருந்துகளில் செல்போன் பார்க்கத் தடை! நடத்துனர்களுக்கு அறிவுரை
பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பேருந்துகளில் பெரும்பாலான நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பதாகவும் உறங்குவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
படிக்க | 'கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்'
Advertisement
Advertisement
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் பணிநேரத்தின்போது செல்போன்களில் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் 2 படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.