இஸ்லாமிய புத்தாண்டு: நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை
இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நபிகள் நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற நாளை, 'ஹிஜ்ரி' எனப்படும் ஆண்டுப் பிறப்பாக இஸ்லாமியர்கள் கொண்டாடடுகின்றனர்.
அதன்படி, சனிக்கிழமை இரவு மொஹரம் பிறை தெரிந்ததையொட்டி, 'ஹிஜ்ரி' ஆண்டுப் பிறப்பை இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
Advertisement
Advertisement
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இஸ்லாமிய புத்தாண்டு எல்லோருக்கும் நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக அமைய பிரார்த்திக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.