சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரில் 8 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நூலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, 8 நீதிபதிகளுக்கும் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
இதையும் படிக்க.. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை: கண்காணிப்பில் மருத்துவமனைகள்
சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சத்திகுமாா், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர், இன்று சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.