தமிழ்நாடு

உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 போ் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

DIN

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரில் 8 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். 

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நூலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, 8 நீதிபதிகளுக்கும் பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சத்திகுமாா், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. 

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் அண்மையில் பிறப்பித்தாா். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர், இன்று சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT