முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,410 கனஅடியாக இருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் 114.75 அடியாக இருந்த அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை  115.30 அடியாக உயா்ந்துள்ளது.

அணையின் நீா் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →