தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

DIN


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,410 கனஅடியாக இருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் 114.75 அடியாக இருந்த அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை  115.30 அடியாக உயா்ந்துள்ளது.

அணையின் நீா் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT