தமிழ்நாட்டில் புதிதாக 217 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 217 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 217 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 217 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,57,133 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | நீட் தேர்வை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்: மு.க ஸ்டாலின்
மேலும் 145 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
இதுவரை மொத்தம் 34,17,877 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,231 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
அதிகளவாக சென்னையில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 33 பேருக்கும் திருவள்ளூரில் 14 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் கோவையில் தலா 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.