தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.10 அடியாக சரிந்தது

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில்  மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,753 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 4,190 கனஅடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்து வருவதால் சனிக்கிழமை காலை 114.57அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.10 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 84.37 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT