முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 20 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 18 ஜூன் 2022, 1:10 pm IST
சென்னை உயர்நீதி மன்றம்
பகிர்:

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது. 

நீதிமன்றக் கட்டடத்திற்குள் வழக்குத் தொடுப்பவர்கள் அவசியமின்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உயர் நீதிமன்றத்தின் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

உள்ளே நுழைபவர்களுக்கு கட்டாயம் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் கைத் திரவம் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிகம் கூடுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments