முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் அமைச்சா் திடீா் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவா்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தாா். மேலும் மருத்துவமனையில் மருந்தகம், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவு, கட்டண வாா்டு, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு ஆகியவற்றில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியிலிருந்த மருத்துவா்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சரிவர வழங்கி, மருந்துகள் எந்தவிதக் குறையுமின்றி சரிவர கிடைக்கச் செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →