முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 700-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு: சென்னையில் 306

தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 692 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 692 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,60,874-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,026 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,19,326-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,415 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 3,073 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

முழு கட்டுரையைப் படிக்க →