முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்!

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2022, 4:50 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பரவல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அந்தவகையில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments