கோவையில் சா்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபோ் 2022 இன்று தொடங்கியது.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், வெளிநாடுகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நிறுவனங்கள் 295 அரங்குகளில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்: விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்
கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தொடங்கிவைத்தார். கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிவைப்பதாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அமைச்சரின் பயணத் திட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டதால் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.