முகப்பு
தமிழ்நாடு

கோவையில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி தொடக்கம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவையில் சா்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபோ் 2022 இன்று தொடங்கியது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
பகிர்:

கோவையில் சா்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபோ் 2022 இன்று தொடங்கியது. 

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், வெளிநாடுகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நிறுவனங்கள் 295 அரங்குகளில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தொடங்கிவைத்தார். கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிவைப்பதாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் மத்திய அமைச்சரின் பயணத் திட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டதால் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.