தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி (மாா்ச் 10,11) ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
Advertisement
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 70 மி.மீ., திருச்செந்தூரில் 20 மி.மீ., சாத்தான்குளத்தில் 10 மி.மீ. மழை பதிவானது.