தமிழ்நாடு

'தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்' - மக்களவையில் டி.ஆர்.பாலு பேச்சு 

DIN

தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். வேண்டுமென்றே ஆளுநர் இவ்வாறு செய்கிறார். கூட்டுறவுத் துறை தொடர்பான மசோதாவையும் நிறுத்தி வைத்துள்ளது ஏன்? 

தமிழகத்துக்கு ஆளுநர் தேவை இல்லை, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஆளுநர் ரவி சட்டப்படி நடக்கவில்லை, அரசியலமைப்பை பின்பற்றவில்லை.

நாங்கள் என்ன காட்டு ராஜ்ஜியமா நடத்துகிறோம்? நாங்கள் எப்படி அரசை நடத்துவது? ஆளுநரை மாற்ற வேண்டும்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக மக்களவையில் டி.ஆர்.பாலு பேசிய அதேநேரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT