முகப்பு
மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை உடனுரை ஞானகந்தசாமி
தமிழ்நாடு

எடப்பாடியில் பங்குனி உத்திர விழா: ஞான கந்த சுவாமி  திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோயிலில், திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

தமிழ்நாடு

எடப்பாடியில் பங்குனி உத்திர விழா: ஞான கந்த சுவாமி  திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோயிலில், திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானை உடனுரை ஞானகந்தசாமி
பகிர்:


எடப்பாடி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோயிலில், திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. 

இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை ஞான கந்தசாமி திருக்கல்யாண நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணவரை கூடத்தில் பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஞான கந்தசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

எடப்பாடி அருகே நடைபெற்ற வள்ளி, தெய்வானை உடனுரை ஞானகந்தசாமி திருக்கல்யாண வைபவ நிகழ்வு.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முத்து ரதத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முத்து ரதத்தினை வடம் பிடித்து இழுத்துவந்தனர். காவடி சுமந்த பக்தர்கள் முருகனைப் போற்றிப் பாடி ஆடியவாறு கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மூலவர் ஞான கந்தசுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞான கந்தசாமி கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →