மார்ச் 27-ல் அதிமுக அமைப்புத் தேர்தல்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புத் தேர்தலானது மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புத் தேர்தலானது மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், அதனைத் தொடர்யது, கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர வார்டு நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் தேர்தல்களும் நடந்து முடியதுள்ளன.
அவ்வாறு நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கான நியமன ஆணைக் கடிதங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்கட்டமாக, கீழ்க்கண்ட 25 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்புத் தேர்தல்கள் வருகின்ற 27.3.2022 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.