தமிழ்நாடு

ஐடிஐ, பாலிடெக்னிக் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை

DIN

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கும் மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022 - 23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவிகள் +2 முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றால் ரூ.1,000 மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  அரசுப் பள்ளி மாணவிகள் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேரும் போது அவர்களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பினை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT