முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு அகற்றப்பட்டன.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியிலுள்ள நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சர்வேயர் ஆகியோரை கொண்டு நீர் நிலை பகுதிகளை அளவீடு செய்து விவசாய ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், மம்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஜோதி, மம்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி இயந்திரம் கொண்டும் விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது சுமார் 19 சென்ட் அளவுக்கு நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கள அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →