முகப்பு
தமிழ்நாடு

தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

குடும்பத் தகராறில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை
பகிர்:


புதுக்கோட்டை: குடும்பத் தகராறில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, மருதாள்மலையில் செலவுக்கு பணம் தராததால், தாய் லீலாவதி மீது மகன் சந்தோஷ் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், லீலாவதி சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவத்தில் சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மகன் சந்தோஷுக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தாயை எரித்துக் கொன்ற குற்றவாளிக்கு எந்தச் சலுகையும் வழங்காமல், 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தவறை உணர்ந்து திருந்த சந்தோஷை 3 மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கவும் நீதிபதி அப்துல் காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →