தமிழ்நாடு

தில்லி பயணத்தின் மர்மத்தை ஸ்டாலின் விளக்குவாரா? எடப்பாடி பழனிசாமி

DIN


சென்னை: தில்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன், துபைக்குச் சென்றார். துபை கண்காட்சி முடிய 6 நாள்களே இருந்த நிலையில், மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை திறந்து வைத்தார்.  

இதையும் படிக்க.. 'வணக்கம் சொல்லவே வந்தேன், நாளை சந்திக்கிறேன்' பரபரப்பைக் கூட்டிய சோனியா

தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சிறு வணிகர்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்று சொன்னவர், முதல்வரானவுடன், வணிக வளாகம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். முதல்வரின் இந்த தில்லி பயணத்தின் மர்மத்தை அவர் விளக்குவாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT