முகப்பு
தமிழ்நாடு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: சரிவிலிருந்து மீண்டது மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் சரிவிலிருந்து மெல்ல மீண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: சரிவிலிருந்து மீண்டது மேட்டூர் அணை நீர்மட்டம்
பகிர்:

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் சரிவிலிருந்து மெல்ல மீண்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1850 கன அடியிலிருந்து 3111 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.50 அடியிலிருந்து 105.58 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 72.26 டிஎம்சியாக  உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1850 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3111 கன அடியாக அதிகரித்துள்ளது. 

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத்தொடங்கி உள்ளது. மழையளவு 22.40 மி.மீ ஆக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →