தமிழ்நாடு

தஞ்சாவூர்: ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்  3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

DIN


தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்  3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட துரித உணவகத்தில் கால்நடை மருத்துவ மாணவர்களான பிரவீன்(22), பரிமலேஸ்வரன்(21), மணிகண்டன்(21) ஆகிய 3 பேரும் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். 

பின்னர் இவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2 ஆம் தேதி கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் "கெட்டுப்போனா ஷவர்மா" சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதியவரை தாக்கிய மூன்று போ் கைது

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

போக்குவரத்து ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

பெண் சாவில் சந்தேகம் உறவினா்கள் புகாா்

SCROLL FOR NEXT