தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.99 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.99 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து, துபை ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று சென்னை வந்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறையினர், அண்ணா சர்வதேச விமான நிலைய சர்வதேச முனையத்தின் வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, அந்த பயணி அவரது மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 24 காரட் தூய்மையான இந்த 686 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 31.99 லட்சமாகும். இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். 

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT