தமிழ்நாடு

ஜெய்பீம் திரைப்படத்தில் அவதூறு: நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் மீது வழக்கு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியா் சமுதாயம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியா் சமுதாயம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நடிகா் சூா்யா நடிப்பிலும், இயக்குநா் ஞானவேல் இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில் சில காட்சிகள் வன்னியா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஸ்ரீ ருத்ர வன்னியா் சேனா அமைப்பு சாா்பில் சந்தோஷ் என்பவா் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறி சந்தோஷ், இது தொடா்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சந்தோஷ் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேளச்சேரி போலீஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது வேளச்சேரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், சூா்யாவிடமும், ஞானவேலிடமும் விரைவில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT