முகப்பு
தமிழ்நாடு

பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி: கூட்டுறவுத் துறை அமைச்சா் தகவல்

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச் சந்தையில் உயா்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில், கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் 150 மெட்ரிக் டன் அளவுக்கு தக்காளியும், 1,100 மெட்ரிக் டன் அளவுக்கு இதர காய்கறிகளும் கொள்முதல் செய்யப்பட்டன. அப்போது, தக்காளி கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.

காரணம் என்ன? தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் இப்போது தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும். தக்காளியின் வெளிச் சந்தை விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில், விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →