தமிழ்நாடு

'மரியாதை நிமித்தமானது': சந்திப்புக்குப் பின் ஸ்டாலின் - மம்தா பானர்ஜி பேட்டி!

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

DIN

இரண்டு நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மேற்கு வங்க இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்புக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், "இரு அரசியல் தலைவர்களும் சந்திக்கும்போது மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை விவாதிப்பது வழக்கம்தான். தேர்தல் தொடர்பாக எதையும் விவாதிக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT