அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடுஅடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை திருப்பூர், கரூர், ஈரோடு சேலம், நீலகிரி, கோவை, மதுரை, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.