தேசிய பத்திரிகையாளர் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேசிய பத்திரிகையாளர் நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுதேசிய பத்திரிகையாளர் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேசிய பத்திரிகையாளர் நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையாளர் நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகை கவுன்சில் தொடங்கப்பட்ட நவ. 16 ஆம் தேதி, தேசிய பத்திரிகை நாளாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய பத்திரிகை/பத்திரிகையாளர் நாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: கமல்ஹாசன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், 'அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு வாழ்த்துகள்!' என்று கூறி
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
(குறளின் பொருள்: அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும், ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?)
என்ற திருக்குறளையும் குறிப்பிட்டுள்ளார்.