முகப்பு
மழை காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் குடைபிடித்தபடி செல்லும் மக்கள்.
தமிழ்நாடு

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
மழை காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் குடைபிடித்தபடி செல்லும் மக்கள்.
பகிர்:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதையடுத்து திருவள்ளூவர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 4 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →