தமிழக காவல் துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய 13 ரௌடிகள் பிடிபட்டனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரௌடிகளை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படிக்க: சென்னையில் ஓர் உடையவர் கோயில்!
மேலும், பிடியாணை நிலுவையிலிருந்த 15 ரௌடிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை, கொள்ளை, நிலஅபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.