முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 133 ரௌடிகள் கைது!

தமிழக காவல் துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 8 அக்டோபர் 2022, 3:27 pm IST
பகிர்:

தமிழக காவல் துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய 13 ரௌடிகள் பிடிபட்டனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரௌடிகளை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், பிடியாணை நிலுவையிலிருந்த 15 ரௌடிகளும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கொலை, கொள்ளை, நிலஅபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments