முகப்பு
தமிழ்நாடு

முலாயம் சிங் மறைவு: இந்தியாவின் சமூகநீதித் தூண் சாய்ந்தது - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  முலாயம் சிங் யாதவ்  மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு என பாமத தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:


சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  முலாயம் சிங் யாதவ்  மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு என பாமத தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. 

இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்.

சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →