தமிழ்நாடு

முலாயம் சிங் இறுதிச் சடங்கில் டி.ஆர்.பாலு, உதயநிதி பங்கேற்பு

DIN

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், திமுக சார்பில் கட்சியின் பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய் கடித்து 101 வயது மூதாட்டி காயம்

சீவநல்லூரில் பேருந்திலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்டவா் கைது

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

தெற்கு தில்லியில் மக்களவை வேட்பாளராக களம் இறங்குகிறாா் திருநங்கை ராஜன் சிங்

SCROLL FOR NEXT