பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார். அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன் மற்றும் அச்சமற்ற நிலையில் பேசுவது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் நிமிர்ந்து நிற்கிறார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.