தமிழ்நாடு

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் பலி!

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

DIN

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

துறையூர் அருகேயுள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர் அளவையும், ஏரிக்கு  நீர் வரும் அளவையும் பார்க்க சனிக்கிழமை சென்றார். அந்த சமயத்தில் அங்கு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. 

இதில் நாகராஜ் மின்னல் பாய்ந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT