தமிழ்நாடு

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் பலி!

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

DIN

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

துறையூர் அருகேயுள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர் அளவையும், ஏரிக்கு  நீர் வரும் அளவையும் பார்க்க சனிக்கிழமை சென்றார். அந்த சமயத்தில் அங்கு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. 

இதில் நாகராஜ் மின்னல் பாய்ந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT