தீயணைப்பு வீரர் திருமுகம் 
தமிழ்நாடு

தீபாவளி இனாம் கேட்ட நாமக்கல் தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்!

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

DIN

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் நல்வினை செல்வன். இவர் தனியார் சாக்குப் பை ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் திருமுகம் அவரிடம் கைப்பேசி வழியாக தீபாவளி இனாம் கேட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட நல்வினை செல்வன் அவரை கண்டித்ததுடன், இனாம் கேட்ட ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.செந்தில் குமார் வீரர் திருமுகத்திடம் விசாரணை மேற்கொண்டு, அதன் பிறகு திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

நைனாமலை பெருமாள் கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த போது தீயணைப்பு வீரர் திருமுகம் அவரிடம் இனாம் கேட்டு உரையாடலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரத்தில் ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதி திறப்பு

விவசாயிகளின் நலனுக்கு எதிராக பாஜக நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

SCROLL FOR NEXT