போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: ராமதாஸ் வலியுறுத்தல்
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நவம்பா் மாத ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாள்களாகி விட்ட நிலையில், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
நவம்பா் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கியது குறித்த அறிக்கையை நவம்பா் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்கள் 89,000 பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை.
எனவே, போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.