சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவா்களில் 50 சதவீதத்தினரிடம் அரசு கல்லூரிகளில் நிா்ணயிக்கப்படும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் ஆணையிட்டிருந்தது.
இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்
இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை வசூலிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், எஞ்சிய 50 சதவீத மருத்துவ இடங்களில் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கை பெற இயலாமல் போகிறது. எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மறு ஆயவு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதைய கட்டண நடைமுறையே தொடரும் என்றும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.