தமிழ்நாடு

அலைப்பேசியை தவிர எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை: விஜயபாஸ்கர் 

DIN

அரசு இயந்திரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பயன்படுத்துகிறார்களென  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். 

மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.18.37 லட்சமும், 1.9 கிலோ தங்கமும் 8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

12 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். திமுக அரசு  அரசு இயந்திரத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல் தனிநபர் மீதான காழ்ப்புணர்சியின் உச்சக்கட்ட நிகழவாக இந்த சோதனையை கருதுகிறேன். ஈபிஎஸ் மற்றும் கழக உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   

இதற்கு முன்னரும் இதுபோல சோதனை மேற்கொண்டுள்ளனர். தற்போது எதுவுமே கிடைக்காமல் என்னுடைய அலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். என்னுடைய ஆதார், மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள்தான் அவர்களுக்கு முக்கியமான ஆவணங்களா? என்னுடைய மகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் மீண்டும் எப்போது வருவீர்கள் என ஜாலியாக கேட்டார். 

அரசு விதிமுறைகளின்படிதான் நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்யப்பட்ட சோதனை இது. எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை. எனது வீட்டில் இருந்து இரண்டு அலைபேசி மட்டுமே கைப்பற்றப்பட்டதென எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT