தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவுக்கு ஆலோசகர் நியமனம்

DIN

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிப்புப் பிரிவின் ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆன்மிக நூல்கள் வெளியிடுவதற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதிப்பகப் பிரிவு ஆலோசகராக கவிஞர் தென்னம்பட்டு ஏகாம்பரத்தை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

தென்னம்பட்டு ஏகாம்பரம், இந்து சமய அறநிலையத் துறையில் திருக்கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் உதவி ஆணையராக பணியாற்றியவர்.  பணி ஓய்வுக்குப் பிறகு அரசின் சிறப்பு உத்தரவின்படி துறை வெளியீடான "திருக்கோயில்" இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கவிதைகள், ஆன்மிகம் குறித்த நூல்கள் பல எழுதியுள்ளார். கவிஞர், எழுத்தாளர் என்பதுடன் அழுத்தமான ஆன்மிக சிந்தனை முத்திரை பெற்ற நூல்களைப் படைப்பவர் எனத் தமிழ் எழுத்தாளர் உலகில் அறியப் பெற்றிருப்பவர்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கவியரசர் கண்ணதாசன், திராவிட இயக்க முன்னோடியும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான புலவர் கா.கோவிந்தன், முதுபெரும் தமிழறிஞர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் முதலான தமிழறிஞர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். 

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நேரடிப் பார்வையில் "முரசொலி" நாளேட்டில் துணை ஆசிரியராகவும் (1972-1975) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT